28.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-
28.3.2021 தேதியிட்ட(இந்த வார) ராணி வார இதழில் மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-
* 90 சதவிகிதத் தத்துவம் என்றால் என்ன?
எந்தத் திட்டமும் தொண்ணூறு விழுக்காடு மக்களை முழுமையாகச் சென்று அடைந்தாலே அது தரமான செயல்பாடு எனக் கூறலாம்.இது நூறு சதவிகிதத்தை இலக்காகக் கொண்டு முழுமூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்.
* எது உண்மையான காதல்?
உருவங்கள் நாளடைவில் மங்கி, உள்ளங்கள் ஓங்கி, உணர்வுகள் ஒன்றும்போது உயிர்ப்பதே உண்மைக் காதல்.
* தலையிருக்க வால் ஆடலாமா?
தலையைக் காப்பாற்றிக்கொள்ள பல்லி வாலைத் தியாகம் செய்யும்போது துண்டிக்கப்பட்ட வால் துள்ளுவதைப் பார்க்கலாம்.எப்போதும் தான் கத்தரித்து விடப்படலாம் என்ற ஞானோதயம் இருக்கும் வால்கள் துள்ளுவது இல்லை.
* புதையல், பதுக்கல் என்ன வேறுபாடு?
யாரோ புதைத்து வைத்தது நமக்குக் கிடைத்தால் புதையல்.
நாமே மறைத்து வைத்து எடுப்பது பதுக்கல்.
* அன்பு, அருள் என்ன வேறுபாடு?
உறவாய்க் கொண்டவர்களிடம் மட்டும் தோன்றுவது அன்பு;
கண்ணில் கண்ட எளியோரிடமெல்லாம் ஏற்படுவது அருள்.
கருத்துகள்
கருத்துரையிடுக