உன் விழிகளில் ! கவிஞர் இரா .இரவி !

உன் விழிகளில் ! கவிஞர் இரா .இரவி ! உன் விழிகளில் விழுந்த நாள் முதலாய் நான் உச்சியில் பறக்கிறேன் உணர்ச்சியில் மிதக்கிறேன் ! என்னையே நான் விரும்புகின்றேன் பின் உன்னையும் நான் விரும்புகின்றேன் ! உடலால் நான் எங்கு இருந்தபோதும் உள்ளத்தால் உன்னிடமே இருக்கின்றேன் ! விழி மூடினால் கனவில் வருகிறாய் விழி திறந்தால் நினைவில் வருகிறாய் ! என்னுள் புகுந்து என்னை இயக்குகின்றாய் என்னை எனக்கு எடுத்து இயம்பினாய் ! மறக்கலாம் என்று நினைத்ததாலும் முடிவதில்லை மனம் முழுவதும் உன்னைய ஆக்கிரமிப்பு ! எல்லை கடந்த பயங்கரவாதம் உன் பார்வை என்னை ஏதோ ஏதோ செய்து விடுகிறாய் ! காந்தம் தோற்கின்றது உந்தன் கண்களிடம் கவர்ந்து இழுத்து யுத்தம் செய்கின்றாய் ! . உன் விழிகளில் என் முகம் பார்த்தேன் என் உள்ளத்தில் உன் முகம் பதித்தேன் !

கருத்துகள்