ுன்னாள் துணை வேந்தரும் கல்வியாளருமான முனைவர் வசந்தி தேவி (Vasanthi Devi) 1938-2025 காலமானார்*

முன்னாள் துணை வேந்தரும் கல்வியாளருமான முனைவர் வசந்தி தேவி (Vasanthi Devi) 1938-2025 காலமானார்* தமிழ்நாட்டின் முக்கியமான கல்வியாளராக, பெண்ணியவாதியாக, சமூக ஆர்வலர் ஆவாராக திகழ்ந்த வசந்தி தேவி அவர்கள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மாரடைப்பால் காலமானார் . வசந்தி தேவி ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார், 1988 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக பொறுப்பு வகித்தார். 1992-1998 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். வசந்தி தேவி பெண்கள், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கல்வி சீர்திருத்தம் என்கிற துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கருத்துகள்