மலரும் நினைவுகள்.பெங்களூரு தூரவாணி நகர் ஐ .டி .ஐ .தமிழ்மன்றம் பாவாணர் பாட்டரங்கில் நடந்த உடனடி 2 நிமிடக்கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை !

மலரும் நினைவுகள்.பெங்களூரு தூரவாணி நகர் ஐ .டி .ஐ .தமிழ்மன்றம் பாவாணர் பாட்டரங்கில் நடந்த உடனடி 2 நிமிடக்கவிதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை ! நடுவர் இனவெழுச்சிப் பாவலர் மகிழ்நன் ! தலைப்பு "தாய் மொழி" கவிஞர் இரா .இரவி ! தாய்மொழியே சிறந்தது என்று அன்றே தேசப்பிதா காந்தியடிகள் உரைத்தார் நன்றே ! நோபல் நாயகன் இரவீந்திரநாத் தாகூரும் நன்றே உரைத்தார் தாய்மொழியே சிறப்பென்று ! கருவாக இருக்கும்போதே சேயுக்கு கற்கண்டாக இனிக்கும் தாய் பேசும் மொழி ! தாய்மொழியில் சிந்தித்தால் சாதிக்கலாம் தாய்மொழியில் பயின்றால் சிகரம் தொடலாம் ! தாய்மொழியில் பயின்றவர் அப்துல் கலாம் தாய்மொழியில் பயின்றவர் மயில்சாமி அண்ணாத்துரை ! ஆரம்பக்கல்வி தாய்மொழி தமிழில் இருந்தால் அனைத்துத் துறையிலும் சாதிக்கலாம் !

கருத்துகள்