சென்னையில் புத்தகத் திருவிழா 6.1.2023 -22.1.2023

புத்தகம் ! கவிஞர் இரா .இரவி ! அகம் புதிதாக உதவுவது புத்தகம் ! அகிலம் அறிந்திட உதவுவது புத்தகம் ! அறிஞர்களை அறிந்திடத் துணை புத்தகம் ! அறிஞராக உயர்ந்திட உதவுவது புத்தகம் ! ஆற்றல் பெருகிடக் காரணம் புத்தகம் ! அறிவு வளர்ந்திடக் காரணம் புத்தகம் ! இல்லம் நிறைந்திடத் தேவை புத்தகம் ! உள்ளம் புத்துணர்வுப் பெறப் புத்தகம் ! எடுத்த செயல் முடித்திடப் புத்தகம் ! ஏணியென உயர்த்துவது புத்தகம் ! மனிதனை மனிதனாக வாழவைப்பது புத்தகம் ! மண்ணில் உள்ள சொர்க்கம் புத்தகம் ! மனதில் மாற்றம் தருவது புத்தகம் ! மனங்களைக் கொள்ளையடிப்பது புத்தகம் ! கொடிய கோபம் தணிக்க உதவும் புத்தகம் ! கொள்கைகள் அறிந்திட உதவும் புத்தகம் ! இலக்கிய ஈடுபாடு வளர்க்கும் புத்தகம் ! இலக்கியதாகம் தணிக்கும் புத்தகம் ! விஞ்ஞான வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் ! விஞ்ஞானிகள் வளர்ச்சிக்குக் காரணம் புத்தகம் ! நேர்முகத்தேர்வில் தேர்வாகக் காரணம் புத்தகம் ! நேரில் பார்க்காதவரையும் நேசிக்க வைக்கும் புத்தகம் ! . மனக்கவலை நீக்கும் மருந்து புத்தகம் ! மனக்குறைப் போக்கும் காரணி புத்தகம் ! மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம் ! மனிதனைக் கண்டுபிடித்துத் தந்தது புத்தகம் ! குற்றவாளியையும் திருத்தி விடும் புத்தகம் ! குற்றங்களைக் களைந்து விடும் புத்தகம் ! நேரத்தை பயனுள்ளதாக்கும் புத்தகம் ! நேர நிர்வாகம் கற்பிக்கும் புத்தகம் ! புத்தரைப் புரிய வைக்கும் புத்தகம் ! சித்தரைச் சிந்திக்க வைக்கும் புத்தகம் ! பெரியாரின் சிந்தனை உணர்த்தும் புத்தகம் ! பெரியோரை மதிக்க வைக்கும் புத்தகம் ! அண்ணாவை அறிய வைக்கும் புத்தகம் ! அறிவைத் தெளிய வைக்கும் புத்தகம் ! திருக்குறளை தெரிய வைக்கும் புத்தகம் ! திருவை வாழ்வில் வழங்கும் புத்தகம் ! வாழ்வியல் உணர்த்துவது புத்தகம் ! வசந்தம் வர வைக்கும் புத்தகம் ! சோதனைகளைச் சாதனைகளாக்கும் புத்தகம் ! வேதனைகளை நீக்கி விவேகம் தரும் புத்தகம் ! வெற்றிகளை நமது வசமாக்கும் புத்தகம் ! தோல்விகளைத் தவிர்த்திட உதவிடும் புத்தகம் ! பலர் புகழ் பெற்றிடக் காரண்ம் புத்தகம் ! பாமரனையும் பாருக்குக் காட்டுவது புத்தகம் ! படித்திட சுகம் தரும் புத்தகம் ! படித்திட சோகம் நீக்கும் புத்தகம் ! படிக்கப் படிக்க உயர்த்திடும் புத்தகம் ! படிக்கல்லாக இருந்து உயர்த்திடும் புத்தகம் ! இரண்டு கால் மிருகத்தை மனிதனாக்கியது புத்தகம் ! இன்னல் நீக்கி இன்பம் தரும் புத்தகம் ! காட்டு மிரண்டிகளை மனிதனாக்கியது புத்தகம் ! காட்டுவாசியையும் அறிஞனாக்கியது புத்தகம் ! கரக்கக் கரக்க பால் தருமாம் காமதேனு ! படிக்கப் படிக்க பரவசம் தரும் புத்தகம் ! இரைக்க இரைக்க தண்ணீர் சுரக்கும் கிணறு ! படிக்கப் படிக்க அறிவு சுரக்கும் புத்தகம் ! உணருங்கள் மிகவும் உன்னதமானது புத்தகம் ! உடலையும் உள்ளத்தையும் செம்மையாக்கும் புத்தகம் ! தினமும் சில மணி நேரம் படியுங்கள் புத்தகம் ! தவமாக வாசியுங்கள் தினமும் புத்தகம் !

கருத்துகள்