2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
2.5.2021 தேதியிட்ட ராணி வார இதழில் " மனத்தில் தோன்றிய வினாக்கள் !"என்ற தலைப்பில்,முதுமுனைவர். இறையன்பு ஐயா அவர்களுடைய கேள்விகளும் பதில்களும் இதோ:-*
* எதை நினைத்துப் பெருமைப்படலாம்?
தற்காலிகங்களின் பொய்க்கால் குதிரையாயிருக்கிற, மாறுகிற உலகில் எதை நினைத்தும் பெருமைப்படுவதற்கில்லை.
* காதல் எப்போது தோற்றுப்போகிறது?
சில காதலர்கள் வெற்றிபெறும்போது.
* அம்மாவின் கை மணம் போல் எதுவும் வருவதில்லையே, ஏன்?
பழக்கமே காரணம்.
தொடக்கத்தில் பழக்கமானது அடக்கத்திற்குப் போகும் வரை ஆனந்தம் அளிக்கிறது.
* ஆயுளை அதிகரிக்க வழி?
விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் நொடி நிமிடமாய் நீளும்.
* யார் உண்மையான பணக்காரர்கள்?
உணவுக்குப் பறக்காதவர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக