படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
தந்தை பெரியார்*
*90-வது வயதில் _ 180 கூட்டம்.*
*91-வது வயதில் _ 150 கூட்டம்.*
*93-வது வயதில் _ 249 கூட்டம்.*
*94-வது வயதில் _ 229 கூட்டம்.*
*வாழ்க்கையின் கடைசி 98 நாட்களில் (95-வது வயதில்) 42 கூட்டம்.*
*இத்தனையும், கடும் நோயின் வலிகளுடன்...*
*ஹெர்னியா பிரச்னையினால் சரிந்துவிழும் குடலை பெல்ட் வைத்துக் கட்டிக்கொண்டு கூட்டம் பேசச் சென்றார்...*
*சிறுநீர் கழிக்க வயிற்றுக்குப் பக்கவாட்டில் ஓட்டைப்போட்டு குழாய் செருகப்பட்டிருக்கும்...*
*இதையெல்லாம் எந்த ஆட்சியை பிடிக்க செய்தார்?*
*எத்தனை தலைமுறைக்கு சொத்து சேர்க்க செய்தார் ?*
*அவருக்கும் கடவுளுக்கும் வாய்க்கால் தகராறா?*
*மதங்களுக்கும் அவருக்கும் முன் விரோதமா ?*
*நான் சொல்வதை கேட்டால் தான்*
*உனக்கு சொர்கம்;*
*என்னை வணங்காவிட்டால் நரகம்*
*என்று கூறும் கடவுள்கள், சாமியார்களுக்கிடையில்...*
*நான் தலைவன் நான் தவறே செய்தாலும் எனக்கு நீ முட்டு கொடுத்தே ஆக வேண்டுமென்று கட்டளையிடும் தலைவர்கள் மத்தியில்,*
*யார் சொன்னாலும், நானே சொன்னாலும்
உன்💙 அறிவைக்கொண்டு, அனுபவத்தைக் கொண்டு, படிப்பினையைக்கொண்டு ஆராய்ந்து
உன் அறிவு ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள் இல்லையென்றால் விட்டுவிடு னு சொன்ன ஒரே தலைவர்
இவர் மட்டுமே...*
கருத்துகள்
கருத்துரையிடுக