இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! நினைவு நாள் 8.4.2021 கவிஞர் இரா .இரவி !

இலக்கிய இமயம் ஜெயகாந்தன்! நினைவு நாள் 8.4.2021 கவிஞர் இரா .இரவி ! கடலூரில் பிறந்த இவர் கதைக்கடல் சென்னையில் சிறந்த இவர் இலக்கியக்கடல் ! தந்தை தண்டபாணி இராணுவ அதிகாரி என்ற போதும் தன் மனதில் பட்டதை செய்து வளர்ந்தவர் ! பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போலவே பல தொழில்கள் செய்து வாழ்வை கற்றவர் ! முருகேசன் என்பது இயற்பெயராக இருந்த போதும் ஜெயகாந்தன் ஜெ.கே. என்றே அறியப்பட்டவர் ! அய்ந்தாவது மட்டுமே படித்து இருந்த போதும் அளப்பரிய ஆற்றல் எழுத்தில் கைவரப்பட்டவர் ! கல்விக்கும் கருத்துக்கும் தொடர்பில்லை என்பதை கதைகளின் மூலம் நிரூபித்துக் காட்டியவர் ! முற்போக்குச் சிந்தனைகளை கதைகளில் வடித்து முத்திரைக் கதைகளின் மூலம் தனிமுத்திரை பதித்தவர் ! ஞானபீடம் என்ற உயர்ந்த விருது பெற்றவர் ! ஞானபீடம் விருதுக்கே பெருமை பெற்றுத் தந்தவர் ! கொள்கைகளை மாற்றிக் கொண்டே போதும் குணங்களை மாற்றிக் கொள்ளாத பண்பாளர் ! நாவல்கள் திரைப்படங்கள் ஆன போதும் நானே பெரியவன் என்று என்றும் சொல்லாதவர் ! மனதில் பட்டதை மறைக்காமல் உரைத்தவர் மனது புண்படும் என்ற கவலை கொள்ளாதவர் ! எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் எதிர்கருத்து இருந்தால் பேசிடத் தயங்காதவர் ! கோடிக்கணக்கான வாசகர்களைப் பெற்றிட்ட கதையரசன் பேச்சில் கதை விடாத மாமனிதன்! மகாகவி பாரதியாரை மிகவும் நேசித்தவர் மட்டற்ற எழுத்தால் மகுடம் சூடியவர் ! மக்கள் மனங்களை எழுத்தால் கவர்ந்தவர் மக்கள் மனங்களைப் படம்பிடித்துக் காட்டியவர் ! பணக்காரன் ஏழை பாகுபாடு பார்க்காதவர் ! பாராட்டும் ரசிகரை ரசிக்கும் நல்லவர் ! எழுதுகோலின் வலிமையை உலகிற்கு உணர்த்தியவர் ! எழுத்தால் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர் ! எழுத்தாளருக்கு உரிய கம்பீரத்தை அவர் என்றுமே கட்டிக் காத்து வந்தவர் ! மறக்க முடியாத மாண்புமிக்க கதைகளை மக்களுக்கு வழங்கி மனங்களில் வாழ்பவர் ! இறுதி வரும் வரை எழுதா விட்டாலும் எழுதிய யாவும் இறுதிக்குப் பின்னும் நிலைக்கும் ! தமிழை அறிஞர்களைப் பழித்தப் போது முரண்பட்டேன் ! தமிழ் வளர அவர் ஒரு காரணமானதால் உடன்பட்டேன் ! கெட்டப்பழக்கங்களில் சில பழகாமல் இருந்திருந்தால் கொஞ்சம் கூடுதலாகவே வாழ்ந்து இருப்பார் ! உடலால் உலகை விட்டு மறைந்திட்ட போதும் உன்னதமான பாத்திரப் படைப்புகளால் வாழ்கிறார் என்றும் ! ஈடு செய்ய முடியாத இழப்பு உண்மை இணையற்ற எழுத்தாளர் அவர் உண்மை ! எழுத்துக்களால் வாழும் ஆளுமைக்கு அழிவில்லை ! இலக்கிய இமயம் என்றால் மிகையில்லை

கருத்துகள்