முதுமுனைவர்.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் " இன்று புதிதாய்ப் பிறந்தோம் "எனும் நூலில்

முதுமுனைவர்.இறையன்பு இ .ஆ .ப .அவர்கள் " இன்று புதிதாய்ப் பிறந்தோம் "எனும் நூலில் (1)புதிதாகப் பிறப்பவர்கள் எதிர்மறைப் பழக்கங்களை உதிர்த்துவிடுவார்கள்.அவர்கள் அருகில் இருப்பவர்கள் தாங்களும் ஓர் அங்குலம் உயர்ந்ததாகப் பரவசப்படுகிறார்கள். ..(2) இந்த நொடி மட்டுமே உண்மையானது என்பதை உளப்பூர்வமாக உணர்ந்தால் மட்டுமே நாம் புதிதாகப் பிறப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. ..(3) தேநீர் பருகுகிறபோது ஒவ்வொரு துளியையும் ரசித்து அதை மட்டுமே நினைத்துப் பருகினால் மட்டுமே இந்த நொடியில் வாழ்வதாகப் பொருள். ..(4) நம்மைச் சுற்றியிருக்கிற இயற்கை இந்த நொடியில்தான் இருக்கிறது. ..(5) பிடிபட்டு விடுவோமோ என்கிற பயத்தில் மீன்கள் நீந்துவதில்லை.அதனால்தான் அவை அழகாக இருக்கின்றன.

கருத்துகள்