ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



ஹைக்கூ !     கவிஞர் இரா .இரவி !


பேசிக்கொண்டன 
புரியவில்லை நமக்கு 
எறும்புகள் ! 

நினைவூட்டியது 
அவளை 
வானவில் ! 

காயம்பட்ட 
சோகம் இசைத்தது 
புல்லாங்குழல் ! 

மீனவரின் 
அட்சயப்பாத்திரம் 
கடல் ! 

அரசியல்வாதிகளின் பொய் 
நூலாடையை 
பொன்னாடை ! 

சுடுகாட்டிலும் 
சிரித்தன 
மலர்கள் ! 

கிளைகளை விட 
நெடியது 
வேரின் பயணம் ! 

உருவம் மட்டுமல்ல 
சுவையும் பெரிது 
பலா ! 

வருத்தத்தில் குழந்தை 
குட்டிபோடவில்லை 
மயிலிறகு ! 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 
மெய்ப்பித்தன 
அயல் நாட்டுப் பறவைகள் ! 

புதிய பொருளாதாரம் 
மலட்டு விதைகள் 
மலடாக்கியது நிலத்தை ! 

சிறுவனின் 
வண்டிச்சக்கரம் 
நுங்கு மட்டை ! 

பறித்த போதும் 
சிரித்தன 
மலர்கள் ! 

காணவில்லை கண்மாய் 
ஊரில் இல்லை ஊரணி 
உலகமயம் ! 

வருங்கால சந்ததிகளின் 
வளம் அழிக்கும் பகைவன் 
நெகிழி ! 

மரத்தை வெட்ட வெட்ட 
பொய்த்தது 
மழை ! 

ஆக்கிரமித்தது 
உலகனேரி 
மதுரை உயர்நீதிமன்றம் ! 

கருத்துகள்