புல்லாங்குழல் ! கவிஞர் இரா .இரவி !
தீக்காயம் பட்ட போதும்
வருந்தவில்லை
புல்லாங்குழல் !
காற்றை இசையாக்கும்
வித்தகக் கருவி
புல்லாங்குழல் !
மவுனமாகவே இருக்கும்
காற்றுத் தீண்டும் வரை
புல்லாங்குழல் !
உருவில் சிறியது
உணர்வில் பெரியது
புல்லாங்குழல் !
காட்டில் விளைந்து
காதோடு உறவாடும்
புல்லாங்குழல் !
தீயால் துளைத்தபோதும்
இசை நல்கும்
புல்லாங்குழல் !
இதழ் குவித்து விரல் பதித்து
காற்றுத் தந்ததும் இசைக்கும்
புல்லாங்குழல் !
அன்று முதல் இன்று வரை
அற்புத இசை
புல்லாங்குழல் !
எம்மொழியும் சம்மதம்
இனிய இசைப் பிறக்கும்
புல்லாங்குழல் !
கானம் இசைத்து
கவலைப் போக்கும்
புல்லாங்குழல் !
பல இசையிலும்
தனித்துக் கேட்கும்
புல்லாங்குழல் !
விழிகள் மூடி செவிகள் திறந்தால்
தேன் பாயும்
புல்லாங்குழல் !
கருத்துகள்
கருத்துரையிடுக