காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !
வானவில் வந்துவிட்டால் மழை வராது
வஞ்சி நீ வந்துவிட்டால் என்னுள்
காதல் மழை !
----------------------------
உதடுகள் பேசாவிட்டாலும்
விழிகள் பேசிவிடுகின்றன
காதல் உரையாடலை !
------------------------------
ஆயிரம் பேருடன் நீ அமர்ந்து இருந்தாலும்
உடன் அகப்பட்டு விடுகிறாய்
என் விழிகளுக்கு !
---------------------------
என்ன விந்தை தெரியவில்லை
ஒருமுறைதான் பார்த்தாய் என்னுள்
ஓராயிரம் அதிர்வுகள்
---------------------------
வஞ்சி நீ சிரிக்கும்
ஒவ்வொரு முறையும்
எனக்குள் மத்தாப்பு !
-----------------
கருத்துகள்
கருத்துரையிடுக