காதல் கவிதைகள் ! கவிஞர் இரா .இரவி !





காதல் கவிதைகள் !  கவிஞர் இரா .இரவி !

வானவில் வந்துவிட்டால் மழை வராது
வஞ்சி நீ வந்துவிட்டால் என்னுள் 
காதல் மழை !
----------------------------
உதடுகள் பேசாவிட்டாலும் 
விழிகள் பேசிவிடுகின்றன 
காதல் உரையாடலை !
------------------------------
ஆயிரம் பேருடன் நீ அமர்ந்து இருந்தாலும் 
உடன் அகப்பட்டு விடுகிறாய் 
என் விழிகளுக்கு !
---------------------------
என்ன விந்தை தெரியவில்லை 
ஒருமுறைதான் பார்த்தாய் என்னுள் 
ஓராயிரம் அதிர்வுகள் 
---------------------------
வஞ்சி நீ சிரிக்கும் 
ஒவ்வொரு முறையும் 
எனக்குள் மத்தாப்பு !
-----------------

கருத்துகள்