தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !
ஒற்றைச் சிறகோடு ! கவிஞர் இரா .இரவி !
ஒற்றைச் சிறகோடும் பறக்க முடியும்
உள்ளத்தில் தன்னம்பிக்கை உரம் வேண்டும் !
இரு சிறகால் பறப்பது என்பது இயல்பு
இரண்டில் ஒன்றை இழந்தும் பறப்பது சிறப்பு !
முயற்சி பயிற்சி செய்தால் போதும்
முன்னோக்கிப் பறக்கலாம் சிறக்கலாம் !
பயன்படாது ஒற்றைச் சிறகு எதற்கு
பாரமென வருந்தினால் பறக்க முடியாது !
ஒற்றைச் சிறகென வருந்துவது விடுத்து
ஓங்கிப் பறக்க முயன்றிட வேண்டும் !
முடியுமா ? என்று தயங்குவது விடுத்து
முடியும் என்றே பறந்திட வேண்டும் !
மற்றவர்களால் வாங்க முடியாத பதக்கம்
மாற்றுத் திறனாளி மாரியப்பன் வாங்கினான் !
காலில் குறை என்று முடங்கவில்லை
காலை முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தினான் !
தலை வழுக்கை என்பதற்காக வருந்திய
தன்னம்பிக்கை எழுத்தாளர் மெர்வின்அவர்கள் !
மீசையைப் பெரிதாக வளர்த்துக் கொண்டார்
மீசைக்காரர் என்றே எல்லோரும் அழைத்தனர் !
வாழ்வியல் தத்துவம் என்று விளக்கினார்
வியந்து விட்டேன் விளக்கம் கேட்டு !
இழந்ததற்காக வருந்துவதை விட்டு விட்டு
இருப்பதைச் செம்மையாக்குவது சிறப்பு !
ஒற்றைச் சிறகு போனால் போகட்டும்
மற்றொன்றுக்கு மகிழ்ச்சி கொள்வோம் !
ஒற்றைச் சிறகோடும் உயரம் செல்லலாம்
உள்ளத்தில் ஒளி பிறந்தால் வழி பிறக்கும் !
கருத்துகள்
கருத்துரையிடுக