தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !
எது நம்மைப் பிரிக்கிறது என்ற பார்க்காமல்
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/ kavignar-eraravi
கைகோர்ப்போம் ! கவிஞர் இரா .இரவி !
எது நம்மைப் பிரிக்கிறது என்ற பார்க்காமல்
எது நம்மை இணைக்கின்றது என்று பார்ப்போம் !
உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைவோம்
ஒப்பற்ற உயர்ந்த தமிழால் ஒன்றுபடுவோம் !
தமிழைத் தமிழாகவே பேசிப் பழகிடுவோம்
தமிங்கிலம் பரவுவதைத் தடுத்தி நிறுத்திடுவோம் !
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றனர் அன்று
ஒன்றுபடுவோம் வாழ்வில் உயர்ந்திடுவோம் !
சாதியை மறப்போம் மதத்தை மறப்போம்
சகோதரர்களாக அனைவரும் சங்கமிப்போம் !
தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்பதை
தவிடு பொடியாக்கி ஒன்று சேர்ந்திடுவோம் !
உலகில் தோன்றிய முதல் மொழி தமிழ்
உலகில் தோன்றிய முதலினம் தமிழினம் !
உலகில் தமிழினம் இல்லாத நாடே இல்லை
உலகம் முழுவதும் பரந்து வாழ்வது தமிழன் !
உலகிற்குப் பொதுமறை தந்தது தமிழினம்
உலகம் வியக்கும் கோயில்கள் கட்டியது தமிழினம் !
கரிகாலன் கட்டினான் கல்லணை அன்று
காலகாலமாய் நிலைத்து நிற்கின்றது இன்றும் !
வியத்தகு சாதனைகள் நிகழ்த்தியது தமிழினம்
விண்ணிலும் சாதனைகள் புரிந்தது தமிழினம் !
வீரத்தில் யாருக்கும் அஞ்சாத இனம் தமிழினம்
வீரத்தை உலகிற்குக் கற்பித்த இனம் தமிழினம் !
அச்சம் என்பதை அறியாத இனம் தமிழினம்
அன்பிற்கு அடிபணியும் இனம் தமிழினம் !
ஆணவம் அதிகாரம் கண்டு அசராத இனம்
அகிலத்தை ஆண்ட இனம் தமிழினம் !
சிதறிக் கிடைக்கும் தமிழர்கள் கைகோர்ப்போம்
சிகரம் தொட அணிவகுப்போம் வாருங்கள் !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
http://tamil.pratilipi.com/
கருத்துகள்
கருத்துரையிடுக