படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 


படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 


மனிதர்களை நினைத்தால் 
எனக்கே வெட்கமாக உள்ளது 
நன்றி மறக்கின்றனர் !

ஐந்தறிவு எங்களை விட 
ஆறறிவு மனிதர்கள் 
மோசம் !

பணத்திற்காக 
எதுவும் செய்யும் 
மனிதர்கள் !

திருடன் வந்தால் குரைப்போம்
திருடனுக்கு வாலாட்டும் 
மனிதர்கள் !

பசிக்காமல் 
உண்பதில்லை நாங்கள் 
மனிதர்கள் ?
-- 

.

கருத்துகள்