புதுவைப் பல்கலைக் கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.அறிவு நம்பி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் ! கவிஞர் இரா .இரவி !





புதுவைப் பல்கலைக் கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.அறிவு நம்பி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் ! 
கவிஞர் இரா .இரவி !

தினமணி நாளிதழில் அறிவார்ந்த கட்டுரைகள் எழுதியவர். மதுரை காமராசர் பல்கலைக் கழக முனைவர் பட்ட  ஒப்புதல் பேராசிரியராக வருகை தந்து போது சந்தித்து உள்ளேன். தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களின் நண்பர். மதுரையில் தினமணி இதழ் சார்பாக கவிபேரசு வைரமுத்து அவர்கள்  திருக்குறள் பற்றி பேசிய அன்று மதுரை வந்து இருந்தார் .நானும் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களும் பேசி மகிழ்ந்தோம் .எனது கவிதைகள் முக நூலில் வாசிப்பதாகவும் நன்றாக உள்ளது என்றும் மோகன் அய்யா முன்பு பாராட்டினார் .தமிழியல் துறைப் பேராசிரியர் என்பதையும் தண்டி இலக்கிய ஆர்வலராக இருந்தார். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு . 

கருத்துகள்