பெங்களூரு பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு !
தூய்மை காப்போம் ! கவிஞர் இரா .இரவி !
சுத்தம் சோறு போடும் என்றனர் அன்று
சுத்தம் என்பது சுகாதாரம் இன்று !
தூய்மை கடைபிடித்தால் வராது நோய்
தூய்மை கேட்டினால் வரும் புதுப்புது நோய் !
அழுக்கை அகற்றுவது கடினம் அன்று
ஐந்து ரூபாய் சலவைக்கட்டி போதும் !
இல்லம் தூய்மையாக இருந்தால்
எவருக்கும் வராது எந்த நோயும் !
தெருவை தூய்மையாக வைத்து இருந்தால்
தெருவில் யாருக்கும் நோய் வரவே வராது !
ஊரை தூய்மையாக வைத்து இருந்தால்
ஊரில் யாருக்கும் நோய் வரவே வராது !
நாட்டை தூய்மையாக வைத்து இருந்தால்
நாட்டில் யாருக்கும் நோய் வரவே வராது !
நோய்களின் காரணி என்பது அசுத்தம்
நோயற்ற வாழ்விற்கு அவசியம் சுத்தம் !
சுத்தம் சுகம் தரும் முற்றிலும் உண்மை
சுத்தமின்மை நோய் தரும் என்பதும் உண்மை !
ஆள் பாதி ஆடை பாதி என்றார்கள்
அணியும் ஆடை சுத்தமாக இருக்கட்டும் !
புற அழுக்கை பொருட்படுத்தாதோர் உண்டு
புறம் அகம் இரண்டின் சுத்தம் மிக நன்று !
சாக்கடை நீரைத் தேங்க விடாமல் இருந்தால்
சாகடிக்கும் டெங்கு கொசு வரவே வராது !
குப்பையைக் குப்பைத் தொட்டியில் போடுவோம்
குப்பையைக் கண்ட இடங்களில் போடாதிருப்போம் !
தெருக்களையும் சாலைகளையும் சுத்தமாக்குவோம்
தேடி நம்மை சுற்றுலாப் பயணிகளை வரவைப்போம் !
சுகாதாரக்கேடு என்பது உயிருக்குக் கேடு தரும்
சுத்தம் என்பது உயிர் வளர்க்க உதவும் உணர்வோம் !
கருத்துகள்
கருத்துரையிடுக