தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! சூரிய தாகம் ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !



சூரிய தாகம் !  கவிஞர் இரா .இரவி !

இரவி என்றால் சூரியன் என்று பொருள் உண்டு 
இரவியின் தாகத்தை சூரிய தாகமாகப் பதிகிறேன் !

காமராசர் கக்கன் போன்ற நேர்மையாளர்கள் 
கரங்களில் நாட்டின் நிர்வாகம் வரவேண்டும் !

சின்னமீனைப் போட்டு சுறாமீனை விழுங்கும் 
சின்னப்  புத்திக்காரர்கள் ஒழிய வேண்டும் !

நீதி நேர்மை நியாயம் எங்கும் எப்போதும் 
நிரந்தரமாக மக்களிடையே நிலவ வேண்டும் !

நாடு முழுவதும் மதுக்கடைகளும் ஆலைகளும்
நிரந்தரமாக உடனடியாக மூடிவிட வேண்டும் !

வெண்சுருட்டு உற்பத்திக்குத்  தடை  வேண்டும்   
வெண்சுருட்டு கிடைக்காத நிலை வேண்டும் !

ஆணாதிக்க சிந்தனை அடியோடு அழிய வேண்டும் 
ஆணிற்கு நிகர் பெண் என்பதை உணர வேண்டும் !

இலஞ்சம் உள்ள நாட்டில் இல்லாது ஒழிய வேண்டும் 
இலட்சிய தாகத்துடன் இளைஞர்கள் வளர வேண்டும் !

ஒழுக்கம் உயிர்க்கு மேலாக மதித்திட வேண்டும் 
ஒழுக்கக்கேடு எங்கும் இல்லாமல் ஒழிய வேண்டும் !

சாதி சமய வேற்றுமைகள் இல்லாது ஒழிய வேண்டும் 
சகோதர உணர்வுடன்  சங்கமிக்க வேண்டும் !

மூட நம்பிக்கை நாட்டில் முற்றாக ஒழிய வேண்டும் 
மூளையைப் பகுத்தறிவிற்கும் பயன்படுத்த வேண்டும் !

கல்வித்துறை முழுவதும் அரசுடைமையாக வேண்டும் 
கல்வித்துறையில் தனியாரை அகற்றிட வேண்டும் !

அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்திட வேண்டும் 
அனைவருக்கும் கல்வியை அரசே வழங்கிட வேண்டும் !
.
ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை வர வேண்டும் 
எல்லாமும் எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும்  !

உழைப்பை அனைவருக்கும்  உறுதி செய்ய வேண்டும் 


உழைக்காதோர் இல்லை என்ற நிலை வர வேண்டும் !

கருத்துகள்