கவிதை ! கவிஞர் இரா .இரவி !

கவிதை !    கவிஞர் இரா .இரவி !

என்னைப் பற்றி கவிதை 
எழுது என்று கவிதை சொன்னது 
என்னவள் சொன்னாள் !

கவிதை எழுத விழிகளைப் பார்த்தேன்  !
கற்ற மொழியே மறந்தது ! 

கவிதை எழுத இதழ்களைப் பார்த்தேன்  !
காளை என்னையே மறந்தேன் !

கவிதை எழுத கழுத்தைப் பார்த்தேன்  !
கடல் சங்கு நினைவில் வந்தது !

அதற்குமேல் பார்ப்பதை நிறுத்தினேன் 
கவிதைக்குப் பதில் காதலே வந்தது !

கருத்துகள்