கவிதை ! கவிஞர் இரா .இரவி !
என்னைப் பற்றி கவிதை
எழுது என்று கவிதை சொன்னது
என்னவள் சொன்னாள் !
கவிதை எழுத விழிகளைப் பார்த்தேன் !
கற்ற மொழியே மறந்தது !
கவிதை எழுத இதழ்களைப் பார்த்தேன் !
காளை என்னையே மறந்தேன் !
கவிதை எழுத கழுத்தைப் பார்த்தேன் !
கடல் சங்கு நினைவில் வந்தது !
அதற்குமேல் பார்ப்பதை நிறுத்தினேன்
கவிதைக்குப் பதில் காதலே வந்தது !
கருத்துகள்
கருத்துரையிடுக