படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
பக்தனை
ஆண்டியாக்கி விட்டு
கோடிகளில் சாமியார்கள் !
அளவிற்கு மிஞ்சினால்
தங்க நகையும்
நஞ்சுதான் !
ஒரு வேளை உணவின்றி
வாடுது ஒரு கூட்டம்
கோடிகளில் ஒரு கூட்டம் !
.
விற்றவர் கோடிக்கு அதிபதி
வாங்கியவர் வறுமையில்
பஞ்சாமிர்தம் !
பக்தனுக்கு
மிஞ்சியது
கோவணம் மட்டுமே !
கருத்துகள்
கருத்துரையிடுக