தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! வீரமங்கை ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !

வீரமங்கை !  கவிஞர் இரா .இரவி !

வீரமங்கை என்று வாசித்ததும் நினைவிற்கு வந்தது 
வேலு நாச்சியார் என்ற வீரப்பெண் அரசியின் ஆளுமை !

முதல்பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையானார்  
முத்திரைப் பதித்து வரலாற்றில் சிறப்பிடம் பெற்றார் !

செல்லமுத்து சேதுபதி முத்தாத்தாள் நாச்சியாரின் 
செல்ல மகளாகப் பிறந்து வளர்ந்தார் வேலு நாச்சியார் !

வீரவாள் சுழற்றி வளரும்போதே பயின்றார் 
விவேகமாக பல மொழிகளும் கற்றுச் சிறந்தார் !

சிவகங்கைச்  சீமையின் அரசர் முத்து வடுகநாதரை
 சீரோடும் சிறப்புடனும் திருமணம்  முடித்தார் !

ஆட்சி அதிகாரம் வெறிப்பிடித்த வெள்ளையர் 
ஆண்ட மன்னன் முத்து வடுகநாதரைக் கொன்றனர் 

உருது மொழி பேசி ஹைதர் அலியிடம் உதவிகள் பெற்றவர் 
உறுதியாக இறுதி வரை நின்று போராடி வென்றவர் !

கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்யும்   பார்ஜோரையும் 
கணக்கை முடித்து மண்ணிற்கு இரையாக்கியவர் !

ஆணாதிக்கம் நிறைந்திட்ட அந்தக் காலத்திலேயே
ஆண்களை விஞ்சும் வண்ணம் போராடி  வென்றவர் !

சிவகங்கைச் சீமையின் சிம்ம சொப்பனமானவர் 
சிறிப்பாய்ந்து சிரம் வீழ்த்தி வாகை சூடியவர் !

மாறுவேடத்தில் சென்று வீரக்குயிலி ஆயுதக்கிடங்கில் 
முழுவதும் எரிந்து முதல் தற்கொலைப் படையானாள் !

பெரிய மருது சின்ன மருது என்ற மருது சகோதரர்கள் 
பேருதவியாக இருந்து பெரும்படை   திரட்டினார்கள் !

திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட வீரப்படை 
திண்டாட வைத்து தோல்வி தந்தது  வெள்ளையனுக்கு !

உயிர்க்குப் பயந்து காட்டிக் கொடுக்காமல் 
உயிரை விட்ட வீரனுக்கு  நடுகல் நட்டு வணங்கினார் !  

உன்னத வீரமங்கையாகி  வெள்ளையரை வென்றவர் 
உலகம் உள்ளவரை வேலு நாச்சியார் புகழ் நிலைக்கும் !

கருத்துகள்