நன்றி . தினமணி கவிதைமணி இணையம் !

நன்றி . தினமணி கவிதைமணி இணையம் !

http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/13/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88---%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF--2665302.html

--

வீரமங்கை !  கவிஞர் இரா .இரவி !

By கவிதைமணி  |   Published on : 13th March 2017 03:46 PM  |   அ+அ அ-   |  
வீரமங்கை என்று வாசித்ததும் நினைவிற்கு வந்தது 
வேலு நாச்சியார் என்ற வீரப்பெண் அரசியின் ஆளுமை !
முதல்பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனையானார்  
முத்திரைப் பதித்து வரலாற்றில் சிறப்பிடம் பெற்றார் !
செல்லமுத்து சேதுபதி முத்தாத்தாள் நாச்சியாரின் 
செல்ல மகளாகப் பிறந்து வளர்ந்தார் வேலு நாச்சியார் !
வீரவாள் சுழற்றி வளரும்போதே பயின்றார் 
விவேகமாக பல மொழிகளும் கற்றுச் சிறந்தார் !
சிவகங்கைச்  சீமையின் அரசர் முத்து வடுகநாதரை
சீரோடும் சிறப்புடனும் திருமணம்  முடித்தார் !
ஆட்சி அதிகாரம் வெறிப்பிடித்த வெள்ளையர் 
ஆண்ட மன்னன் முத்து வடுகநாதரைக் கொன்றனர் 
உருது மொழி பேசி ஹைதர் அலியிடம் உதவிகள் பெற்றவர் 
உறுதியாக இறுதி வரை நின்று போராடி வென்றவர் !
கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்யும்   பார்ஜோரையும் 
கணக்கை முடித்து மண்ணிற்கு இரையாக்கியவர் !
ஆணாதிக்கம் நிறைந்திட்ட அந்தக் காலத்திலேயே
ஆண்களை விஞ்சும் வண்ணம் போராடி  வென்றவர் !
சிவகங்கைச் சீமையின் சிம்ம சொப்பனமானவர் 
சிறிப்பாய்ந்து சிரம் வீழ்த்தி வாகை சூடியவர் !
மாறுவேடத்தில் சென்று வீரக்குயிலி ஆயுதக்கிடங்கில் 
முழுவதும் எரிந்து முதல் தற்கொலைப் படையானாள் !
பெரிய மருது சின்ன மருது என்ற மருது சகோதரர்கள் 
பேருதவியாக இருந்து பெரும்படை   திரட்டினார்கள் !
திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்ட வீரப்படை 
திண்டாட வைத்து தோல்வி தந்தது  வெள்ளையனுக்கு !
உயிர்க்குப் பயந்து காட்டிக் கொடுக்காமல் 
உயிரை விட்ட வீரனுக்கு  நடுகல் நட்டு வணங்கினார் !  
உன்னத வீரமங்கையாகி  வெள்ளையரை வென்றவர்
உலகம் உள்ளவரை வேலு நாச்சியார் புகழ் நிலைக்கும் !
.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
Attachments area

கருத்துகள்