தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி

தினமணி   கவிதைமணி தந்த தலைப்பு !

மல்லுக்கட்டும்  ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி 

ஏறுதழுவுதல் என்பது தமிழர்களிடையே 
இன்றல்ல என்றும் நடைமுறையில் உள்ளது !

எதற்காக  தடை   செய்கிறார்கள் என்று 
எண்ணிப் பார்த்தால் விளங்கியது சதி !

உலகமயம் என்ற அரக்கனின்  வேலை   
உள்ளூர் நாட்டு மாடுகள் அழிப்பு வேலை !

மேலோட்டமாகப் பார்த்தால் இத்தடை 
மாடுகள் காப்புப் போலத்தான் தெரியும்  !

உள்குத்து வேலை ஆராய்ந்தால் புரியும் 
ஒருவழியாக காளை இனத்தை அழித்தல் ! 

காட்டு விலங்கு அல்ல காளை 
வீட்டு உறுப்பினர் எங்கள் காளை !

தமிழனின் தன்னிகரில்லா வீரத்தை  வியந்து 
தரணி பாராட்டுவது பொறுக்கவில்லை !

கொட்டக்  கொட்டக் குனிபவன் அல்ல 
கொட்டம் அடக்கப் புறப்பட்டு விட்டோம் !

எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் என்று 
எங்கள் மீது தப்புக்கணக்கு வேண்டாம் !

பொறுமைக்கும் ஒரு எல்லை  உண்டு 
பொங்கி எழுந்தால் தாங்க  மாட்டீர்கள் !

தமிழன் என்றால் இளித்தவாயன் என்று 
தவறாக என்ன வேண்டாம் விழித்து விட்டோம் !

தடையை நீக்குவதைத் தவிர வழியில்லை 
தடையை நீக்கினால் மதிப்புறும் நீதிமன்றம் !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்