நன்றி .தினமணி கவிதைமணி இணையம்

நன்றி .தினமணி கவிதைமணி இணையம்
http://www.dinamani.com/…/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE…
.
எதிர்காலம் ! கவிஞர் இரா .இரவி !
By கவிதைமணி | Published on : 09th January 2017 04:16 PM | அ+அ அ- |
 எதிர்காலம் பற்றிய கவலையில் பலர்
நிகழ்காலத்தை வீணடித்து வருகின்றனர் !
இன்று நன்றாக வாழப் பழகு மானிடனே
இந்த நிமிடம் கழியட்டும் நன்றே !
எதிர்காலம் எதிர்காலம் என்று சொல்லியே
இனிய குழந்தைகளின் மகிழ்வை அழிக்காதீர்கள் !
நாளை என்பது உறுதி இல்லை ஆனால்
நாளும் இன்று என்பதே இனிமையாகும் !
இந்த நொடியை இந்த நிமிடத்தை
இனிமையாக்கு இனிமை நாளையும் தொடரும் !
நாளைய கனவிலேயே பலர் இன்று
நாளை வீணாய் கழித்து வருகின்றனர் !
இன்று இருப்பார் நாளை இருப்பதில்லை
என்பது வாழ்வியல் கண்ட உண்மை !
இன்றே வாழ்நாளில் கடைசி என்று எண்ணி
இனி ஒவ்வொரு நாளும் வாழ்ந்து பழகு !
உனக்கான தன்னல வாழ்வு வாழ்வல்ல
ஊருக்காகவும் வாழ்ந்து பழகு இனிக்கும் !
உதவ எண்ணினால் நாளை என்று
ஒதுங்காமல் இன்றே நன்றே செய்திடு !
இறந்த பின்னும் நீ வாழ விரும்பினால்
இன்றே நன்று செய்து வாழ்வாங்கு வாழ் !

கருத்துகள்