யாரைத்தான் நம்புவதோ ? கவிஞர் இரா .இரவி !

யாரைத்தான் நம்புவதோ ? கவிஞர் இரா .இரவி !

இனிப்பு உணவில் சேர்க்காதே என்கின்றனர்     
இனிப்பு உணவில்  சேர்த்திடு  என்கின்றனர்   !

அசைவம் உண்ணாதே கேடு என்கின்றனர்   
அசைவம் உண்ணு நன்மை  என்கின்றனர் !

முட்டை உணவில் வேண்டாம் என்கின்றனர் 
முட்டை உணவில் வேண்டும்  என்கின்றனர் !

கோதுமை உணவில் சேருங்கள் என்கின்றனர் !
கோதுமை சேர்க்க வேண்டாம் என்கின்றனர் !

சர்க்கரை அளவு அடிக்கடி சோதி என்கின்றனர் 
சர்க்கரை அளவு சோதிக்க வேண்டாம் என்கின்றனர் !

உலகம் முழுவதும் மனிதனுக்கு சர்க்கரையின் 
உச்சப்பட்ச அளவு ஒன்றுதான் என்கின்றனர் !

ஊருக்குஊர் தட்பவெப்பபடி சர்க்கரையின் 
உச்சப்பட்ச அளவு மாறும் என்கின்றனர்  !

சர்க்கரை நல்லது கெட்டது  இரண்டு வகை உண்டு 
சோதனையில் இரண்டையும் ஒன்றாகவே காட்டும் !

சர்க்கரை நோய் என்பதே உள்நோக்கமான  கற்பிதம் 
சர்க்கரை நன்மை தரும்  நோயன்று என்கின்றனர் !

ஆங்கில மருந்துகள் விற்பதற்காகவே இவர்கள் 
அனைவரையும் நோயாளி ஆக்குகின்றனர் !

ஆங்கில மருத்துவம் போலி என்கின்றனர் 
சித்த மருத்துவம் போலி என்கின்றனர் !

மருத்துவத்திலும் வந்தது அரசியல் குழப்பம் 
மருந்திலும் வந்தது அரசியல் குழப்பம் !

பேலியோ உணவுமுறை என்கின்றனர் 
போலியோ என சிலர் சந்தேகிக்கின்றனர் !

சர்க்கரையின் உச்சப்பட்ச அளவு  அன்று வேறு 
சர்க்கரையின் உச்சப்பட்ச அளவு  இன்று வேறு !

இவர்களாகவே அளவை நிர்ணயித்து  உள்ளனர் 
இவர்களின்  தவறான  கற்பிதம் என்கின்றனர் !

போலியான உணவுக்குக் கட்டுப்பாடு என்பது 
பொழிவானவர்களையும் நோயாளியாக்கும் !

எல்லாம் தெரிந்தபோது குழப்பம் வந்தது 
எதுவும் தெரியாதபோது நிம்மதி இருந்தது !

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்