ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !


ஹைக்கூ ! சென்ரியு !                   கவிஞர் இரா .இரவி !

மதித்தால்
மதிக்கும்
குழந்தை !

உடலில் இருக்கலாம்
உள்ளத்தில் இல்லை அழுக்கு
உழைப்பாளி !

உருவாக்கும்
முன்னேற்றம்
மனஎழுச்சி !

விதைத்தால்தான் முளைக்கும்
நினைத்தால்தான் நடக்கும்
வாழ்க்கை !

பிறருக்காக வாழ்
இறந்த பின்னும்
வாழ்வாய் !

சிந்தித்துப் பார்
பகையாளி மனநிலையில்
விலகும் பகை !


சுவர் இன்றி
சித்திரம் உண்டு
காகிதத்தில் !

காலம் கடந்து விழித்தால்
காலம் கடந்துதான் விடியும்
வாழ்க்கை !

அஞ்சாதே
அஞ்சினால் கூடும்
துன்பம் !

முடியாததை முடித்திடும்
நடக்காததை நடத்திடும்
நட்பு !

வீணாக்குகின்றான் சோம்பேறி
விவேகமாக்குகின்றான் அறிவாளி
நேரம் !

பாராட்டுக
திறமை இருந்தால்
பகைவனையும் ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்